வணக்கம், கொஞ்சம் வேல அதிகமாக இருந்ததால, அதிகமாக எழுத முடியவில்லை, அப்படிங்கிற பொய்யோட, இந்தப் பதிவு எழுத ஆரம்பிக்கிறேன்!
எவ்வளவோ செய்திகள், தினந்தோறும் வந்து போகின்றன. நாமும் படித்து, வருத்தப்பட்டு, மகிழ்ந்து, நொந்து, என்று பல்சுவைகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றோம்... சில செய்திகள் 10 ஆண்டுகளுக்கு முன் வந்தவைதான் என்றாலும், 10 ஆண்டுகள் கழித்தும், வந்து கொண்டிருப்பது ஆச்சர்யத்தையும், அளவில்லா கோபத்தையும் வரவழைக்கின்றன. போதும்டா, மேட்டருக்கு வாடா, விஜய் மாதிரி ஓவரா பில்டப் கொடுத்துட்டு இருக்க... அப்படிங்கிறது காதுல விழுவுது...
சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி, "நிதி நிறுவன மோசடி, முதலாளி ஓட்டம், மக்கள் காவல் துறையில் புகார்"... இப்படி நீண்டு கொண்டே சென்றது. மக்கள் புகார் மட்டும் அளிக்கவில்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், சாலை மறியலில் ஈடுபடப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இந்த செய்திக்குப் பின்னூட்டங்கள் ஏராளமாக வந்திருந்தன. அவற்றில் பெரும்பாலானவை, "இந்த நிகழ்வுகளுக்க காரணம் அரசுதான் என்றும், அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு, மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டு"மென்றும் எழுதி இருந்தார்கள்.
நானும் ஒரு பின்னூட்டமிட்டேன். "காவல்துறை அதிகாரிகளுக்கு, முதலில், அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்களை கைது செய்யுங்கள், எளிதில் வெளியில் வரமுடியாத அளவிற்கு, இந்திய தண்டனைச் சட்டத்தை உபயோகப்படுத்துங்கள், பின்பு, அந்த நிறுவனத்தின் முதலாளியை விட்டு விடுங்கள், மக்களே அவனை அடித்து கொன்று விடுவார்கள்" என்று எழுதி இருந்தேன்.
அதைத்தான் இங்கும் சொல்ல வருகின்றேன். காரணம், பணத்தின் மீது ஆசை, பேராசையாக மாறுகின்றது. 1 க்கு 10 என்று எவன் கூறினாலும், அங்கே சென்று பல்லை இளிக்கும் மக்களுக்கு அதுதான் தண்டனை.
மேலும், இப்படி செய்கின்ற மக்கள்தான், பணத்திற்கு ஓட்டு போடுகின்றார்கள். இவர்களுக்கு எந்த அரசாங்கமும் இழப்பீடு போன்ற எந்த சலுகைகளையும் அளிக்க முன்வராது. அப்படி வரவும் கூடாது.
அரசாங்கத்தால், மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வங்கிகள் இருக்கின்றன. அவைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். தனியார் நிறுவனங்கள் எதிலுமே முதலீடு செய்யாதீர்கள், வருத்தபடாதீர்கள்.
8 கோடி மக்களும் இதைப் படிப்பார்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. படிக்கும் ஒரு சிலர் மற்றவர்களுக்கு புத்தி சொல்லுங்கள். இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது என்று கூறுங்கள். அவர்களுக்கு புரிய வையுங்கள்.
மக்கள் மேலும் மேலும் பணத்தால் குற்றங்கள் செய்ய நேரிட்டால், இழப்பு அவர்களுக்குத்தான் என்ற உண்மையை உரைக்கச்சொல்லுங்கள்.
Wednesday, November 25, 2009
Friday, October 9, 2009
திணையும் நிலமும்
*** இக்கட்டுரையை எழுதி, சிங்கைப் பதிவர்கள் நடத்திய மணற்கேனி போட்டிக்காக அனுப்பியவர், என் மனைவி, திருமதி முகிலரசி தமிழரசன் ***
திணையும் நிலமும்
முன்னுரை:
கல் தோன்றி மண் தோன்றா காலத்தும் முன் தோன்றிய மூத்தக்குடி நம் தமிழ்க்குடி; இயற்கையைக் கண்டு அஞ்சி வாழ்ந்த மனிதர்களுக்கு மத்தியில், அவற்றிற்கு உருவம் தந்து, உணர்வுகள் தந்து தன்னுள் கடத்திக் கொண்டவன் தமிழன். கட்டற்ற (ஐம்)பூதங்களின் கட்டுமான உருவமே மனிதன் என்பதை உணர்ந்து கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திவந்தான். காட்டு விலங்கினைப் போல் காடும், மலையும் சுற்றி வேட்டையாடி உணவு உண்டு, நாடோடிகளாய்த் திரிந்து வந்தவனின் வாழ்க்கைப்பாதையை மாற்றி அவனை ஒரு இடத்தில் நிலையாகக் குடியமர்த்தியது விவசாயத்தொழில். விவசாயத்திற்கு முன்னோடி தமிழன்தான் என்றாலும் தமிழர்கள் அனைவரும் விவசாயிகள் அல்ல. மருதநிலமே விவசாயத்தின் கருவறை! மருத நிலமக்கள்தான் அதன் பெற்றோர்கள்! அது என்ன மருதநிலம்??
கட்டுரையில் காண்போம் வாருங்கள்!
தமிழகம், நில அமைப்பின் அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மலைப்பகுதி, வனப்பகுதி, சமநிலப்பகுதி(வயல்வெளி), கடற்பகுதி மற்றும் பாலைநிலம். தமிழக மக்களும் இந்த ஐந்து நிலப்பகுதிகளிலும் விரவி இருந்தனர். மனிதனாக, தமிழனாக பொதுவில் இருந்தும் அவர்கள் வாழ்க்கைமுறை இந்த நில அமைப்பினால் பெரிதும் வேறுபட்டது. ஒவ்வொரு நிலப்பகுதிகளின் சூழ்நிலையையும், தன்மையையும்
ஐம்பூதங்கள்தான் நிர்மாணிக்கின்றன; இருப்பினும் ஐம்பூதங்களில் நிலையானதும், மனிதனால் எளிதில் பகுக்கக் கூடியதும், ஒவ்வொரு பகுதியும் புறவேறுபாடுகள் பெருமளவு உடையதுமான "நிலத்தின்" தன்மையைப் பொறுத்துப் பிரிக்கப்பட்டன.
ஒவ்வொரு நிலத்தின் இயல்புக்கேற்ப மனிதனின் வாழ்க்கை முறையும், எண்ண உணர்வுகளும் வேறுபட்டன. மக்களின் எண்ணங்களுக்கும், அந்த எண்ணங்களின் உந்துதலுக்கும் நிலைக்கலமாய் அமைந்தது 'நிலம்'. மனிதன் சிந்திக்கத் துவங்கியதும், அவன் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கினான். வாழ்க்கை முறை சூழலுக்கு ஏற்ப வேறுபட்டாலும், அவன் வாழும் முறை செவ்வனே அமைய வேண்டும் என்று கருதினான்.
புற வாழ்வில் வீரமும், அகவாழ்வில் காதலும் அனைத்து நில மக்களுக்கும் பொதுவானதாகவும், முதன்மையானதாகவும் அமைந்தன.
இந்தக்கட்டுரையில், ஐவகை நில அமைப்பினையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையினையும் காண்போம்.
திணையும் நிலமும்:
திணை என்பது இரு பொருள் தரும் ஒரு சொல் ஆகும்.
1.நிலம்
2.ஒழுக்கம்
தலைப்பில் நிலம் என்றுத் தனியே தந்தமையால், இங்கு திணை என்னும் சொல் ஒழுக்கத்தைக் குறிக்கின்றது. பொதுவாக ஒழுக்கத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
- உள்ளத்தே மட்டும் உணர்ந்து, வெளியில் எடுத்துச் சொல்ல இயலாத அகவொழுக்கம். காதல் இவ்வகைத்தே.
- மற்றவர்களிடத்து வெளிப்படுத்தக் கூடிய உணர்வுநிலைகள் புறவொழுக்கம். வீரம், கொடை, கல்வி போன்றவை இவ்வகையின.
நிலவமைப்பு:
தமிழகத்தின் ஐவகை நிலப்பகுதிகள்:
காடும் காடு சார்ந்த நிலப்பகுதி - முல்லை
மலையும் மலை சார்ந்த நிலப்பகுதி - குறிஞ்சி
வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதி - மருதம்
கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதி - நெய்தல்
"முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"
- (தொல்காப்பியம் அகத்திணையியல் 5)
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"
- (தொல்காப்பியம் அகத்திணையியல் 5)
'ஐவகைநிலம் என்று சொல்லி, இங்கு நான்கு மட்டுமே குறிக்கப்படுகின்றது?' என்ற கேள்வி எழலாம். பாலை என்பது தனியான ஒரு நிலப்பகுதி அல்ல. வெம்மை நிறைந்த கோடைக்காலத்தில் முல்லையும் குறிஞ்சியும் தம் நிலையிலிருந்து திரிந்து மணல் நிறைந்த வெளியாக அமையும் பகுதி பாலை என்று பகுக்கப்படுகிறது. மருத நிலத்தில் வற்றாத நதிகள் பாய்ந்து வளங்கொழிக்கும்; விவசாயம் தொடர்ந்து நடைபெறும். நெய்தல் நிலம் கடல் சார்ந்த பகுதி. எனவே இவ்விரண்டிலும் வறட்சித் தோன்றுவது அரிது. ஆனால், முல்லை குறிஞ்சியில் சிறு சிறு சுனைகளும் காட்டாறுகளும் மட்டுமே. எனவே அப்பகுதிகள் கோடைக் காலத்தில் வறண்டு, வெம்மை மிகுந்து தோன்றும்.
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவங் கொள்ளும்"
- (சிலம்பு 11ம் காதை 64-66)
திணை இரண்டு வகைப்படும்:
1.அகத்திணை
2.புறத்திணை
திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். மக்களின் ஒழுகலாறுகளை அகம், புறம் என்னும் இரண்டு பகுதிகளாகப் பகுக்கலாம்.
அகத்திணை:
அகம் - உள்ளம்; ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்ப உணர்வுகளை அயலார்க்குக் கூற இயலாது, அகத்தாலே உணரக்கூடியன அகப்பொருள் ஆகும். அகப்பொருள் பற்றிய ஒழுக்கம் அகவொழுக்கம்~அகத்திணை எனப்படும்.
அகத்திணை ஏழு வகைப்படும்:
"கைக்கிளை முதலாப் பெருந்திணை
இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப"
- (தொல் அகத்திணை 1)
இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப"
- (தொல் அகத்திணை 1)
1.கைக்கிளைத்திணை
2.குறிஞ்சித்திணை
3.முல்லைத்திணை
4.மருதத்திணை
5.நெய்தற்திணை
6.பாலைத்திணை
7.பெருந்திணை
குறிஞ்சி முதல் பாலை ஈறாக உள்ள ஐந்து திணைகளும் 'அன்பின் ஐந்திணை' எனப்படும்.
கைக்கிளைத் திணை என்பது 'ஒருதலைக் காதலை'க் குறிப்பது;
பெருந்திணை என்பது 'பொருந்தாக் காமம்' ஆகும். வயதில் பொருந்தாதவர்களிடைப்பட்ட காமம். முதியவனுக்கும் இளையவளுக்கும் அல்லது இளையவனுக்கும் முதியவளுக்கும் இடையில் தோன்றும் காதல். இவை இரண்டும் கீழ்மக்களுக்குரித்தன.
அகத்திணைப் பொருள்கள் மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்படுகிறது. அவை,
1.முதற்பொருள்
2.கருப்பொருள்
3.உரிப்பொருள்
முதற்பொருள்:
"முதல் எனப்படுவது நிலம் பொழுது
இரண்டின் இயல்பென மொழிப"
இரண்டின் இயல்பென மொழிப"
இவை எல்லாம் இலக்கியங்களுக்கான இலக்கணம் ஆகும். ஆனால், இலக்கியம் என்பது மக்களின் வாழ்க்கைமுறைகளை எழுத்துருக்களால், ஏட்டளவில் படம்பிடிப்பது தானே. மக்களின் வாழ்வோடு இயைந்த இலக்கியங்கள் மட்டுமே காலவெள்ளத்தில் மிதந்துவரக்கூடியன. அவை எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடியனவாகவும் அமையவேண்டும்.
மனித உணர்வுகளின் நிலைக்கலனான நிலமும், அந்நிலத்தின் இயல்புகளை மெருகேற்றக் கூடிய பொழுதும் முதற்பொருள் ஆகும்.
நிலம்:
"மாயோன் மேய காடுஉறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"
மாயோன் - திருமால்; திருமால் விரும்பி வாழ்கின்ற கானகப் பகுதியும்; வனப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் தெய்வம் திருமால்.
சேயோன் - முருகன்; முருகன் விரும்பி வாழ்கின்ற மலைப்பகுதி; மலைவாழ் மக்களின் தெய்வம் முருகன். முருகன் ஏன் கோச்சுக்கிட்டு மலைமேல போய் போய் உக்காந்துக்கறாரு ன்னு இப்ப புரியுதுங்களா?? :-)
வேந்தன் - இந்திரன், தேவர்களின் தலைவன்; தீம்புனல் - தீம் என்றால் இனிமை என்று பொருள்.
பெரும்பாலும் இந்நிலப்பகுதிகளில் பாய்கின்ற நீர் ஆற்று நீர். ஆற்றுநீரின் சுவை இனிமைதானே. அதாவது, கடல்நீர் போல் உவர்க்காமல், சில இடங்களில் உள்ள நீரினைப் போல் துவர்க்காமல்... மருதநிலப்பகுதியில் இன்சுவையுடைய வற்றாத நதிகள் எப்போதும் பாய்ந்து வளம் பெருக்குகின்றன. மருதநில மக்களின் தெய்வம் இந்திரன்.
வருணன் - வருணபகவான், மழைக்குரிய தெய்வம். மழைக்குரிய தெய்வம் என்று சொல்வதை விட நீருக்குரிய தெய்வம் என்று சொல்லலாம். அதாவது, ஆற்றுநீர், கடல்நீர், மேகம், மழைநீர் என்று நீர் பல விதங்களில் இருக்கின்றது. நீரின் தெய்வமான வருணன், பரந்து விரிந்த பரவையின் கரையோர மக்களுக்கு இறைவன் ஆவான்.
பெருமணல் உலகம் என்பதில், மணல் ஆற்றுபகுதிகளிலும் இருக்கும் அதனால் மருதமா? நெய்தலா? என்று மயக்கம் தோன்றலாம். ஆற்றின் அடிப்பகுதியில் தான் மணல்மண் இருக்கும்!! ஆற்றங்கரை பெரும்பாலும் விவசாயத்திற்கேற்ற கரிசல்மண் போன்ற மண் பகுதியாகத்தான் இருக்கும். மணற்மண் நிறைந்த ஆற்றின் அடிப்பகுதியில் எவரும் வசிப்பதில்லை!கடற்கரை அதிகம் மணற்பாங்கான பகுதியாக இருக்கும். கடற்கரை மணலில் வசித்து, கடலைத் தங்கள் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்கள் நெய்தல் நில மக்கள். பெருமணல் உலகம் என்பது, மக்கள் வசிக்கின்ற கடற்கரையைக் குறிக்கிறது.
பொழுது:
பொழுதுகள் இரண்டு பகுதிகளாகப் பகுக்கப்படுகிறது.
1.பெரும்பொழுது
2.சிறுபொழுது
பெரும்பொழுது:
ஒரு ஆண்டினை ஆறு பிரிவுகளாகப் பிரித்தால், ஒவ்வொரு பிரிவும் ஒரு பெரும்பொழுது ஆகும். பெரும்பொழுது ஒவ்வொன்றும் இரண்டு மாத கால அளவுடையது.
கார்காலம் - ஆவணி, புரட்டாசி
குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனி காலம் - மார்கழி, தை
பின்பனி காலம் - மாசி, பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி
சிறுபொழுது:
சிறுபொழுது என்பது ஒரு நாளின் ஆறு கூறுகள். சிறுபொழுது ஒவ்வொன்றும் பத்து நாழிகை (4 மணிநேர)க் கால அளவுடையது. (1 மணி நேரம் - 2 1/2 நாழிகை)
காலை - (காலை 6 மணி முதல் 10 மணிவரை)
நண்பகல் - (10 மணி முதல் மதியம் 2 மணிவரை)
எற்பாடு - (மதியம் 2 மணி முதல் சாயங்காலம் 6 மணிவரை; எல்-சூரியன்; பாடு - மறைவு~ சூரியன் மறையும் காலம்)
மாலை - (மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை)
யாமம் - (இரவு 10 மணி முதல் 2 மணிவரை; நள்ளிரவு)
வைகறை - (நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணிவரை; விடியல்)
கருப்பொருள்:
"தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப"
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப"
ஒவ்வொரு திணைக்கும், அவற்றின் நில அமைப்புக்கேற்ப மக்களின் வாழ்வினுக்கு ஆதாரமாகவும் அமைபவை கருப்பொருள்கள் எனப்படுகின்றன. மக்களின் வாழ்வோடு இயைந்த கருப்பொருள்கள் பதினான்கு வகைப்படும்.
தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு,பறை, யாழ், பண், தொழில் என கருப்பொருள்கள் பதினான்கு பகுதிகளை உடையது.
உரிப்பொருள்:
ஒவ்வொரு திணை மக்களின்,அக உணர்வுக்கு உந்துதலாக அமையும் காரணிகளான முதற்பொருளுக்கும் கருப்பொருளுக்கும் ஏற்ப, அத்திணை மக்களின் உள்ள உணர்வுகள் அமையும். இவை ஒவ்வொரு திணைக்கும், அத்திணைக்கே உரித்தான உணர்வுகளாக அமைவதால் இவை உரிப்பொருள்கள் ஆகும்.
"போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி ஊடல் அணி மருதம் - நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை இரங்கிய போக்கேர் நெய்தல்
புல்லுங் கலிமுறை கோப்பு"
- கலித்தொகை
ஆக்கமளி ஊடல் அணி மருதம் - நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை இரங்கிய போக்கேர் நெய்தல்
புல்லுங் கலிமுறை கோப்பு"
- கலித்தொகை
பொருள் ஈட்டவோ, போர்நிமித்தமாகவோ பிரிந்து செல்லுதலும், பிரிவின் நிமித்தமாய் அமைவனவும் - பாலைத்திணையின் உரிப்பொருள் ஆகும்.
தலைவனும் தலைவியும் சந்தித்து அளவளாவி மகிழ்வது புணர்தலும், புணர்தல் நிமித்தமாய் அமைவனவும் - இது குறிஞ்சித்திணைக் குரியது.
தலைவன், பரத்தையர் மனைபுகுவதால் அவன் மேல் பொய்க்கோபம் கொள்ளுதலும், ஊடல் நிமித்தமும்- மருதத்திணைக்குரியது.
வினைநிமித்தமாய்ப் பிரிந்து சென்ற தலைவனுக்காக, பொறுமையுடன் தன் இல்லில் காத்திருத்தலும், இருத்தல் நிமித்தமும்- முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் ஆகும்.
தலைவனும், தலைவியும் பிரிந்திருக்கும் காலத்தில், ஒருவரை ஒருவர் எண்ணி ஏக்கம் கொள்ளுதலும், அதன் நிமித்தம் அமைவனவும் நெய்தல் திணையின் உரிப்பொருள் ஆகும்.
புறத்திணை:
மக்களின் புறவாழ்வினைப் பற்றியது. மக்களின் கல்வி, வீரம்,ஆட்சிமுறை, வெற்றி, அறம், கொடை, ஒழுக்கம், பண்பாடு,பழக்கவழக்கங்கள் முதலியனவற்றைப் பற்றி அமைவது புறத்திணை. போரும், வீரமும், வெற்றியுமே தமிழனின் புறஒழுக்கத்தில் முன்னிலைப் பெற்றன.
"வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;
வட்கார் மேற்செல்வது வஞ்சியாம் - உட்கா(து)
எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கார்
செருவென் றதுவாகை யாம்"
வட்கார் மேற்செல்வது வஞ்சியாம் - உட்கா(து)
எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கார்
செருவென் றதுவாகை யாம்"
1.வெட்சித்திணை:
ஒரு மன்னன், வேறொரு நாட்டின் மேல் படையெடுக்கும் முன் அந்நாட்டின் பசுக்களைக் கவர்வது வழக்கம். இதன் மூலம் அவர்கள் அந்நாட்டின் மேல் போர்த் தொடுக்கப் போகிறார்கள் என்று பொருள். வீரர்கள் வெட்சிப் பூமாலையை அணிந்து சென்றுப் பசுக்களைக் கவர்ந்து வருவர். தமிழர்கள் போரிலும் அறத்தைப் பின்பற்றினர். போர் செய்யும் காலத்தில், பெண்கள், குழந்தைகள், முதியோர், உடல்நலங்குன்றோயோர், ஆநிரைகள் ஆகியனவற்றுக்கு எத்தீங்கும் நேராமல் போரிடுவர். (வெட்சி நிரை கவர்தல்; நிரை-பசு)
வெட்சி மலர் என்பது, இட்லிப்பூ ன்னு சொல்லுவோம்ல அதுதான்.
2.கரந்தைத் திணை:
தன் நாட்டு பசுக்களை வேற்றுநாட்டு மன்னன் கவர்ந்து விட்டால், அவர்கள் அப்படியே விட்டுவிடுவதில்லை. கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்கச் செல்லும் நாட்டு வீரர்கள் கரந்தை பூமாலையை அணிந்து செல்வர். (மீட்டல் கரந்தையாம்; கரந்தை - திருநீற்றுப்பச்சை)
3.வஞ்சித் திணை:
ஒரு மன்னன், வேறொரு நாட்டின் மீது போர் தொடுக்கச் செல்ல பல காரணங்கள் உண்டு.
- பலநாடுகளைக் கைப்பற்றி, தன் எல்லைகளை விரிவாக்கி, தன் வீரத்தை உலகுக்கு எடுத்துரைத்தல்;
- பழிவாங்குதல்;
- தன்கீழ் அடிபணியாத சிற்றரசன் பால் போர்தொடுத்து அப்பகுதியைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருதல்;
ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டி, அந்நாட்டின் மேல் போருக்குச் செல்லும் வீரர்கள் வஞ்சிப் பூவைச் சூடிச் செல்வர். (வட்கார் மேற்செல்வது வஞ்சி; வட்கார் - பகைவர்; வஞ்சி - ஆற்றிலுப்பைமரம்)
4.காஞ்சித் திணை:
தன் நாட்டின் மேல் மண்ணாசைக் கொண்டோ, வேறு காரணத்தினாலோ, போர்த்தொடுத்து ஒருவன் வந்தால் இவன் உடனேஅடிபணிந்துவிடமாட்டான். அது தமிழனுக்கு அழகுமல்ல. அவனை எதிர்த்து நின்று போர்புரிவான். தன் நாட்டின் மீது போர்புரிவதற்காக வந்த பகைவேந்தனை எதிர்த்து நின்று போர் புரிவது காஞ்சித்திணை ஆகும். இவர்கள் காஞ்சிப் பூமாலை அணிந்து போர்புரிவர். (உட்காது எதிரூன்றல் காஞ்சி; உட்காது - அஞ்சாது, ஊன்றல் - நிலைநிறுத்துதல்; காஞ்சி - ஆற்றுப்பூவரசுமரம்)
5.நொச்சித் திணை:
பகைவர்கள், மதிலை வளைத்துக் கொள்ளும் போது,மன்னன் கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டு அவர்களை எதிர்த்து போரிட்டு மதிலைச் சுற்றியுள்ள வீரர்களை விரட்டி, கோட்டையைக் காப்பது நொச்சித் திணை ஆகும். மதில் காக்கும் வீரர்கள் நொச்சி மலர் மாலைச் சூடுவர். (எயில்காத்தல் நொச்சி; எயில் - கோட்டை மதிற் சுவர்; நொச்சி - சிந்துவாரம்)
6.உழிஞைத் திணை:
மதிலை முற்றிலும் வளைத்துவிட்ட அரசன், தன் படைகளுடன் மேலும் முன்னேறிச் சென்று கோட்டையைக் கைப்பற்றுவது உழிஞைத் திணை ஆகும். கோட்டையை முற்றுகையிடும் வீரர்கள் உழிஞை மலர் மாலை அணிந்துகொள்வர். (அது வளைத்தலாகும் உழிஞை; உழிஞை - முடக்காத்தான் என்னும் கொடிவகை)
7.தும்பைத்திணை:
தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை அரசனை, போர்க்களத்தில் நேருக்கு நேராக எதிர்த்து நின்று போரிடுவது தும்பைத்திணை ஆகும். போர்க்களத்தில் எதிர்த்து நின்று போர்புரியும் வீரர்கள் தும்பை மலர் மாலையை அணிவர். (அதிரப் பொருவது தும்பையாம்; தும்பை நாம் பொதுவாக, கொல்லைப் புறங்களில் காணும் ஒருவகை களைச்செடி; வெண்மைக்கு உதாரணமாக் கூட சொல்வாங்க; தும்பைப் பூவு மல்லுவேட்டி என்று திரைப்பாடல் ஒன்று கூட வருமே)
8.வாகைத்திணை:
போர்க்களத்தில், போரிடும் மன்னர்களில் வெற்றி பெறும் பிரிவினர் வாகைப் பூமாலையை அணிந்து மகிழ்வர். போரில் வெற்றிபெறுதல் வாகைத்திணை ஆகும். (போர்க்களத்து மிக்கார் செரு வென்றது வாகை; செரு - போர்; தூங்குமூஞ்சி மரம் ன்னு சொல்வாங்க; சூரியன் மறையும் வேளையில் இதன் இலைகளும் சுருங்கிவிடும்; தொட்டாசிணுங்கியைப் போல். காலையில் மீண்டும் அதன் இலைகள் விரிந்துவிடும்.)
9.பாடாண்திணை:
பாடப்பெறுபவரது, வீரம், கொடை, கல்வி, புகழ் ஆகியனவற்றைப் பற்றிக் கூறும் திணை.
இதுவரை திணைகளும் அவற்றின் விளக்கங்களும் பார்த்தோம். இனி அவை எவ்வாறு ஒன்றோடொன்று பொருந்துகின்றன என்று பார்ப்போம்.
புறநானூறு
பாடல்-173: யான் வாழுநாள் வாழிய!
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்
திணை: பாடாண்; துறை: இயன்மொழி
யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே.
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே.
-------------------------------------------------------------
குறிஞ்சித் திணை:
முதற்பொருள்:
நிலம்: மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியும்
பொழுது: பெரும்பொழுது - குளிர்காலம் மற்றும் முன்பனிக்காலம் (ஐப்பசி முதல் தைமாதம் வரை)
சிறுபொழுது - யாமம் (நள்ளிரவு)
கருப்பொருள்:
தெய்வம் - முருகன்
மக்கள் - உயர்ந்தோர் - வெற்பன், பொருப்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி
தாழ்ந்தோர் - குறவர், குறத்தியர்,கானவர்
பறவை - கிளி, மயில்
விலங்கு - சிங்கம், புலி, கரடி, குரங்கு, பன்றி, யானை
ஊர் - சிறுகுடி, பாக்கம்
நீர் - அருவிநீர், சுனைநீர்
பூ - குறிஞ்சி, காந்தள், வேங்கை
மரம் - அகில், வேங்கை, பலா, சந்தனம், தேக்கு, மூங்கில், அசோகு
உணவு - மலைநெல், திணை, மூங்கிலரிசி
பறை - தொண்டகப்பறை, வெறியாட்டுப்பறை
யாழ்- குறிஞ்சியாழ்
பண் - குறிஞ்சிப்பண்
தொழில் - தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், திணைகாத்தல், மலைநெல் விளைத்தல்
உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
குறுந்தொகை
பாடல்-40: தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்.
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்.
புறத்திணை:
குறிஞ்சித்திணைக்கு உரிய புறத்திணை போர் துவங்குவதற்கு அறிகுறியான நிரைகளைக் கவரும் வெட்சித்திணை ஆகும்.
புறநானூறு:
பாடல்-262: தன்னினும் பெருஞ்சாயலரே
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: வெட்சி; துறை: வெண்டாட்டு
"நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்-
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று;
நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே."
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்-
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று;
நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே."
------------------------------------------------
முல்லைத்திணை:
முதற்பொருள்:
நிலம்: காடும் காடு சார்ந்த நிலப்பகுதியும்
பொழுது : பெரும்பொழுது - கார்காலம் (ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்கள்)
சிறுபொழுது - மாலை
கருப்பொருள்:
தெய்வம் - திருமால்
மக்கள் - உயர்ந்தோர் - தோன்றல், கிழத்தி, மனைவி, குறும்பொறை நாடன்
தாழ்ந்தோர் - ஆயர், ஆய்ச்சியர், இடையர், கோனார்
உணவு - வரகு, சாமை, முதிரை
விலங்கு - முயல், மான், பசு
பூ - முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்
மரம் - கொன்றை, காயா, குருந்தம்
பறவை - காட்டுக்கோழி, மயில்
ஊர் - பாடி, சேரி
நீர் - காட்டாறு(கான்யாறு), குறுஞ்சுனை
பறை - ஏறுகோட்பறை
யாழ் - முல்லையாழ்
பண் - முல்லைப்பண்(சாதாரிப்பண்)
தொழில் - ஏறு(காளை)தழுவுதல்,ஆநிரை மேய்த்தல், களைகட்டல், கடாவிடல், சாமை,வரகு விதைத்தல், குரவைக் கூத்தாடல், குழலூதல்
உரிப்பொருள்:
காத்திருத்தலும் இருத்தல் நிமித்தமும்
குறுந்தொகை
பாடல்-162: தலைவன் கூற்று:
கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலே
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தமுமோ மற்றிது தமியோர் மாட்டே.
- கருவூர் பவுத்திரனார்.
பலர்புகு தரூஉம் புல்லென் மாலே
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தமுமோ மற்றிது தமியோர் மாட்டே.
- கருவூர் பவுத்திரனார்.
பாடல்-220: தலைவி கூற்று:
பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே.
-ஒக்கூர் மாசாத்தியார்.
புறத்திணை:இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே.
-ஒக்கூர் மாசாத்தியார்.
முல்லைத்திணைக்கான புறத்திணை போருக்குப் புறப்பட்டுச் செல்லும் வஞ்சித்திணை ஆகும். தலைவன், போருக்குச் சென்றுவிடுவதால் அவன் வருகைக்காகப் பொறுமையாக தலைவி காத்திருப்பது இத்திணைக்குரிய உரிப்பொருளாகும்.
புறநானூறு
பாடல்-41: காலனுக்கு மேலோன்!
பாடியவர்: கோவூர் கிழார்
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
திணை: வஞ்சி; துறை: கொற்ற வள்ளை
"காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவின்
செருச்செய் முன்ப! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நின் சினைஇயோர் நாடே."
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவின்
செருச்செய் முன்ப! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நின் சினைஇயோர் நாடே."
-----------------------------------------
மருதத்திணை:
முதற்பொருள்:
நிலம்: வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியும்
பொழுது: பெரும்பொழுது: பெரும்பொழுதுகள் ஆறும் (பன்னிரண்டு மாதங்களும்)
சிறுபொழுது: வைகறை
கருப்பொருள்:
தெய்வம் - இந்திரன்
மக்கள் - உயர்ந்தோர் - ஊரணன், மகிழ்நன்
தாழ்ந்தோர் - உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
உணவு - செந்நெல், வெண்ணெலரிசி
விலங்கு - எருமை, நீர்நாய்
பூ - செங்கழுநீர், தாமரை, குவளை
மரம் - மருதம், வஞ்சி, காஞ்சி
பறவை - நாரை, நீர்க்கோழி, அன்னம், குருகு, தாரா
ஊர் - பேரூர், மூதூர்
நீர் - மனைக்கிணறு, ஆற்றுநீர், கிணற்றுநீர், குளத்துநீர்
பறை - மணைமுழவு, நெல்லரிகிளை
யாழ் - மருதயாழ்
பண் - மருதப்பண்
தொழில் - நெல்லரிதல், களைபறித்தல், கடாவிடல்
உரிப்பொருள்:
ஊடலும் ஊடல் நிமித்தமும்
ஐங்குறுநூறு
தலைவி கூற்று: புனலாட்டுப்பத்து
முதல் பாடல்: 71
சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே.
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே.
தலைவன் கூற்று: பாடல்-73
வண்ண ஒந்தழை நுடங்க வாலிழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்
கள்நறுங் குவளை நாறித்
தண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே.
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்
கள்நறுங் குவளை நாறித்
தண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே.
புறத்திணை:
உழிஞைத்திணை; கோட்டையைச் சுற்றிவளைக்கும் உழிஞைத் திணை. பரத்தையர் வீட்டுக்குச் செல்வதால் தலைவன்பால் கொள்ளும், அன்புகலந்த பொய் கோபம் - ஊடல்.
புறநானூறு:
பாடல்-37: புறவும் போரும்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
திணை: வாகை; உழிஞை எனவும் பாடம்
துறை: அரச வாகை, குற்றுழிஞை எனவும் முதல் வஞ்சி எனவும் பாடம்
நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள்வேல்
சினங்கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி,
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தொகை! செருவத் தானே!
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள்வேல்
சினங்கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி,
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தொகை! செருவத் தானே!
-------------------------------------
நெய்தற்திணை:
முதற்பொருள்:
நிலம்: கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியும்
பொழுது: பெரும்பொழுது: பெரும்பொழுதுகள் ஆறும் (பன்னிரண்டு மாதங்களும்)
சிறுபொழுதுகள்: எற்பாடு
கருப்பொருள்:
தெய்வம் - வருணன்
மக்கள் - உயர்ந்தோர் - சேர்ப்பன், துறைவன், புலம்பன்
தாழ்ந்தோர் - பரதவர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர்
உணவு - மீன், உப்புக்குப் பெற்ற பொருள்(பண்டமாற்றுமுறை)
விலங்கு - முதலை, சுறா
பூ - தாழை, நெய்தல், புன்னை, அடம்பம்
மரம் - புன்னை, ஞாழல், கண்டல், தாழை
பறவை - கடற்காகம்
ஊர் - பட்டினம், பாக்கம்
நீர் - மணற்கிணறு, உவர்க்கழி(உவர்நீர்க்கேணி)
பறை - மீன்கோட்பறை, நாவாய்ப்பறை
யாழ் - விளரியாழ்
பண் - நெய்தல் பண், செவ்வழிப்பண்
தொழில் - மீன்பிடித்தல், மீன்உணக்கல், உப்பு உணக்கல், உப்புவிற்றல்
உரிப்பொருள்:
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
குறுந்தொகை:
பாடல்-184: தலைவன் கூற்று-
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉம் கான லானே.
- ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன்.
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉம் கான லானே.
- ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன்.
பாடல்-57: தலைவி கூற்று-
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.
- சிறைக்குடி ஆந்தையார்.
- சிறைக்குடி ஆந்தையார்.
புறத்திணை:
தும்பைத்திணை; போர்க்களத்தில் இருபடைவீரர்களும் எதிர்த்து நின்று போர் புரியும் தும்பைத்திணை; தலைவனை நெடுநாளாகப் பிரிந்த தலைவி மிகவும் வருந்துதலும், அவள் கொள்ளும் வருத்தத்தைக் கண்டு நற்றாயும் தோழியும் இரங்குதலும் இதன் உரிப்பொருளாகும்.
போர்க்களத்தில், இரு புறத்து வீரர்களும் எழுப்பும் வீரமுழக்கம் கடலலை வெகுண்டு ஆர்ப்பரிப்பதை ஒத்திருக்கின்றமையால், போர்நிகழும் இடம் நெய்தல் நிலத்தினுக்குரியதாகிறது.
புறநானூறு:
பாடல்-87: எம்முளும் உளன்!
பாடியவர் - ஔவையார்
பாடப்பட்டோன் - அதியமான் நெடுமானஞ்சி
திணை - தும்பை; துறை - தானைமறம்
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
------------------------------------------
பாலைத்திணை:
முதற்பொருள்:
நிலம் - சுரமும் சுரம் சார்ந்த நிலப்பகுதியும்
பொழுது: பெரும்பொழுது - இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலம்
சிறுபொழுது - நண்பகல்
கருப்பொருள்:
தெய்வம் - துர்க்கை (கொற்றவை)
மக்கள் - உயர்ந்தோர் - காளை, விடலை, மீளி, எயிற்றி
தாழ்ந்தோர் - எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
உணவு - சூறையாடலால் வரும் பொருள்
விலங்கு - வலியிழந்த யானை, புலி, செந்நாய்
பூ - குரவம், பாதிரி, மரா
மரம் - ஓமை, இருப்பை, உழிஞை, பாலை
பறவை - புறா, பருந்து(கழுகு)
ஊர் - குறும்பு
நீர் - வற்றியசுனை, நீர்வற்றின கிணறு,
பறை - துடி, போர்ப்பறை, ஊரெறிப்பறை
யாழ் - பாலையாழ்
பண் - பாலைப்பண் (பஞ்சுரம்)
தொழில் - வழிப்பறி, நிரைகவர்தல்,போர்செய்தல்,கொள்ளை
உரிப்பொருள்:
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
குறுந்தொகை
பாடல்-56: தலைவன் கூற்று:
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்மதானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.
- சிறைக்குடி ஆந்தையார்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்மதானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.
- சிறைக்குடி ஆந்தையார்
பாடல்-140: தலைவி கூற்று:
வேதின வெரிநின் ஓதிமுது போத்து
ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து
ஈங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே.
- அள்ளூர் நன்முல்லையார்.
ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து
ஈங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே.
- அள்ளூர் நன்முல்லையார்.
புறத்திணை:
வாகைத்திணை
போர் முடிந்த பின், வெற்றி தோல்வி எவருக்கென்று முடிவாகி வாகைசூடுவதினால், வாகைத்திணை இதற்குரிய புறத்திணை ஆகிறது.
போர் முடிந்ததும், அந்த போர்க்களம் எத்தகைய கொடூரமாய்க் காட்சியளிக்கும்! வெட்டுண்டு இறந்த உடல்கள், சிதறிய உடற்பாகங்கள், குற்றுயிரும் குலையுயிருமாகக் கேட்கும் ஈன ஒலிகள், எங்கும் குருதி நாற்றம், போர்க்களம் புகுந்தார் எழுப்பும் ஓலக்குரல்...
இவற்றினால், போரின் முடிவுப்பகுதி வெம்மை நிறைந்த பாலை நிலத்துக்குரிதாகிறது.
புறநானூறு
பாடல்-77: யார்? அவன் வாழ்க!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
திணை: வாகை; துறை: அரசவாகை
கிண்கிணி களைந்த கால் ஒண்கழல் தொட்டுக்
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
அயினியும் இன்று அயின் றனனே; வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்துநிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும் அதனினும் இலனே.
--------------------------------------------------------
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
அயினியும் இன்று அயின் றனனே; வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்துநிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும் அதனினும் இலனே.
------------------------------
முடிவுரை:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இது வள்ளுவரின் வாக்கு. ஒழுக்கம் என்பது நம் நிலத்தில், நிலங்களில், எவ்வாறு போற்றப் பட்டது என்பதற்கு, வெகு சில எடுத்துக்காட்டுகளை மேலே காணலாம். ஒவ்வொரு நிலங்களில் உள்ள மக்கள், எவ்வாறான ஒழுக்கங்களைக் கடைபிடித்தனர், அவர்களின் வாழ்வு முறை எவ்வாறு இருந்தது என்று நாம் இன்று படிக்க முடிகின்றது. தொல்காப்பியம் முதல், இந்நாளில் வரும் புதுக்கவிதைகள் வரையிலான எழுத்துச் சான்றுகள், நம்முடைய வாழ்க்கையையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டு நாகரீகங்களையும் மிக அழகாக, தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறான சான்றுகளைப் போற்றி பாதுகாத்து, படித்து, வாழ்க்கையில், நடைமுறையில் அதைப் பயன்படுத்தி, நாம் நல் வாழ்வு பெறவேண்டும்.
வணக்கம்,
முகிலரசி
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இது வள்ளுவரின் வாக்கு. ஒழுக்கம் என்பது நம் நிலத்தில், நிலங்களில், எவ்வாறு போற்றப் பட்டது என்பதற்கு, வெகு சில எடுத்துக்காட்டுகளை மேலே காணலாம். ஒவ்வொரு நிலங்களில் உள்ள மக்கள், எவ்வாறான ஒழுக்கங்களைக் கடைபிடித்தனர், அவர்களின் வாழ்வு முறை எவ்வாறு இருந்தது என்று நாம் இன்று படிக்க முடிகின்றது. தொல்காப்பியம் முதல், இந்நாளில் வரும் புதுக்கவிதைகள் வரையிலான எழுத்துச் சான்றுகள், நம்முடைய வாழ்க்கையையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டு நாகரீகங்களையும் மிக அழகாக, தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறான சான்றுகளைப் போற்றி பாதுகாத்து, படித்து, வாழ்க்கையில், நடைமுறையில் அதைப் பயன்படுத்தி, நாம் நல் வாழ்வு பெறவேண்டும்.
வணக்கம்,
முகிலரசி
Tuesday, October 6, 2009
மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்
"இந்த சாஃப்ட்வேர் பசங்க வந்தாலும் வந்தானுங்க, எல்லா விலை வாசிகளும் ஏறிப்போச்சு, என்னைக்குத்தான் விடிய போகுதோ?!" இதுதான் இந்தியாவின் எந்த மூலையிலும் ஒலிக்கக்கூடியதாக இருக்கின்றது, 1994 முதல்.
விவசாயம்:
அப்படியென்றால், இன்னும் 4% வளர்ச்சி கூட இல்லை என்பதுதானே உண்மை?!
விவசாயம் செய்பவர்களுக்கு நம்பிக்கை வரும்படி இப்படிப் பட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
கல்வி:
2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிக அளவு படித்தவர்கள் உள்ள மாநிலம், கேரளா (90.9%). தமிழகத்தின் சதவீதம், 73.4%.
இப்படிப்பட்ட சூழலில், படிப்பை தொடர்வதை விட, வேறு ஏதாவது செய்யட்டுமே என, தன் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களே அதிகம்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை:
இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என்று, தெருக்களில் இன்று நடக்க முடியாத நிலை மக்களுக்கு.
இவற்றையெல்லாம் தாங்காத இயற்கை இன்னொறு புறம், காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர்களில் காட்டு வளங்கள் நாசமாகின்றன.
சுகாதாரத்துறை:
இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்களையும், அங்கு வசிக்கின்ற பெரும்பாலான விவசாயக் குடும்பங்களுக்கான வளர்ச்சி என்றால், அது அவர்களின் அறியாமையைப் போக்குவதாகும். அவர்கள் இன்றும், மூட நம்பிக்கையிலும், இருக்கின்ற அவர்களை மீட்டு விட்டாலே, கிராமங்கள் வளர்ச்சிப் பெற்றுவிடும். நான் விவசாயத் துறைத் தலைப்பில் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களும் இதற்குப் பொருந்தும்.
விவசாயம் மட்டுமன்றி, நெசவுத்தொழில், மட்பாண்ட உற்பத்தி போன்ற அனைத்து தொழில் வளர்ச்சிகளும் கிராமப்புற வளர்ச்சியே. இவைகளின் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பது, அவைகளின் விற்பனைக்கு வழி வகுப்பது போன்ற நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளே, ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முடிவுரை:
இப்படி எல்லாத் துறைகளுக்கும் ஐந்தாண்டுத் திட்டங்களிட்டும், அவற்றை சரியான முறையில் நிர்வகிக்காமல் அதிகமான துறைகள், இன்று துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன.
நிர்வாகத்திறமையும், அடிப்படை வசதிகளையும், அதற்கான ஒத்துழைப்பை மக்களும் அளிப்பின், மென்பொருள் துறை மட்டுமல்லாது, எல்லாத் துறைகளும் சிறந்து விளங்கும்.
இப்படிக்கூறுபவர்கள் யார்? என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இவர்களால் ஏன் இந்த விலையேற்றங்களைப் பொருத்துக் கொள்ள முடியவில்லை? இவர்கள் செய்கின்ற வேலைக்கு சம்பளம் இல்லையா? குறைவா? ஏன் குறைவு? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள். ஒவ்வொன்றிற்கும் உரிய விடையளித்தால், அதுவே தொடர்கதையா எழுதலாம்.
மென்பொருள் துறையை ஊக்குவிப்பதன் மூலம் யாருக்கு இலாபம் என்ற வினாவிற்கான விடைதான் மற்ற துறைகளின் சரிவிற்கான காரணம்.
எந்த துறையிலும் செய்ய முடியாத அளவிற்கு செலவு செய்யும் துறை மென்பொருள் துறை என்றால் அது மிகையாகாது. காரணம், வெளிநாட்டு முதலீடு.
வெளிநாட்டு நிறுவனங்களும், அவர்களை நம்பி நம் நாட்டு நிறுவனங்களும், அவர்களுக்கு வருகின்ற லாபத்திற்கேற்றவாறு, ஊதியங்களை அளித்து வருகின்றனர்.
இவற்றின் மூலம், இளைஞர்கள் தாம் எண்ணியவாறு செலவு செய்ய வகை செய்யப் படுகிறது. எந்த பொருளுக்கும், எந்த ஒரு விலையும் தரத் தயாராக உள்ளனர். இதனால் ஏற்படும் விலையேற்றமானது, பொருளின் உற்பத்தியாளரைச் சென்றடையாமல், இடைத் தரகர்களுக்குச் சென்றடைகின்றது. இதுதான் இனைறைய மோசமான நிலை.
இதனைப் போக்க, மென்பொருள் துறை தவிர, மற்ற துறைகளிலும், அரசு கவனம் செலுத்த வேண்டும். எந்த துறைகள்? கீழே காண்போம்.
விவசாயம்:
உடுக்க உடையில்லாமலும், இருக்க இடமில்லாமலும் உள்ள மக்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், எப்போதும் அவர்களின் குரல் மட்டும் உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்பதுதான்.
அப்படிப்பட்ட உணவு உற்பத்தி செய்யும் துறையானது இன்று மிகவும் நலிந்துள்ள நிலையில் இருப்பதை நாம் அறிவோம். பணம் இருந்தால் எதனையும் வாங்கி விடலாம் என்ற அரேபியக் கொள்கையில் ஆழ்ந்துள்ள இந்தியாவின் எதிர்காலமே இன்று கேள்விக்குறியாகியுள்ள நிலை.
இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 62 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்தான் வெள்ளையர்களால் இந்தியாவின் வளம் சுரண்டப்பட்டது என்று கூறி போராட்டம் செய்து சுதந்திரம் வாங்கிவிட்டோம். ஆனால் இன்று இந்தியாவின் நிலை என்ன?
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றும், விவசாயிகள் என்றும் பல வண்ணங்களில் உடையணிந்து கொண்டு பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்.
விவசாயிகளின் நிலையும், விவசாயத்தின் நிலையும் இன்றும் அப்படியே உள்ளது என்பதுதான் வருத்தமான உண்மை.
விவசாயத்திற்கென தனியே பிரத்தியேகமான ஒரு அமைச்சகம், ஒரு அமைச்சர், அவருக்கு பல ஆட்சிப்பணி பொருப்பில் உள்ள அறிவுள்ள அரசு ஆலோசகர்கள், அறிவியல் வல்லுனர்கள் என்றெல்லாம் இருந்தும், 62 ஆண்டுக்குப் பின்னும், ஆண்டிற்கு 4% வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று இணையத் தளத்தில் இட்டுள்ளார்கள்!
அப்படியென்றால், இன்னும் 4% வளர்ச்சி கூட இல்லை என்பதுதானே உண்மை?!
இந்த நிலை மாற வேண்டும். இருக்கின்ற நிலங்களை மனைகளாக மாறவிட்டு, இயற்கை வளங்களை இருட்டான கட்டடங்களாக மாற்றும் நிலை மாற வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை அரசு உருவாக்கித் தர வேண்டும்.
விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டும் விவசாயம் வளர்ந்து விடாது. அவர்களின் விளைச்சலுக்க ஏற்ற விலை அளிக்கப் பட வேண்டும். இன்றைய கால கட்டத்தில், இடைத் தரகர்களின் பிடியில் இருந்து விவசாயப் பொருள்கள் விடுபட வேண்டும். அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து, அதன் மூலம், சராசரியான, நியாயமான விலையை நிர்ணயித்து, பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாயம் செய்பவர்களுக்கு நம்பிக்கை வரும்படி இப்படிப் பட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
வறட்சி ஒரு பெரிய காரணமாக உள்ளது. விவசாய ஆராய்ச்சியில் அதிக கவணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியைத் தாங்கக் கூடிய அளவில், விளை பொருள்களை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை அரசு மான்யத்துடன் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு செய்தாலன்றி இந்தியாவில் விவசாயம் என்பது அதிசயமாகிவிடும்.
கல்வி:
உலகலவில், கல்வியில் நல்ல இடத்தில் உள்ள சில நாடுகளில், இந்தியாவும் ஒன்று. மென்பொருள் துறையில் மாற்றம் வந்துவிட்டதாலும், இந்தியாவில் இளைஞர்கள், அதிக அளவில் சம்பளம் பெறுவதாலும், இந்தியாவின் கல்வித்துறையானது வளர்ந்துவிட்டது என்று பொருள் இல்லை.
சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் அடைந்துள்ள நிலையில், நம் நாட்டின் கல்வித்தரத்தின் அளவு மட்டும் அதிகரிக்க வில்லை. கல்வித் தரம் மட்டுமல்ல, இன்றும், கல்வியறிவு பெற்றவர்களைப் பற்றி கணக்கெடுக்கும் நிலையும் உள்ளது. இதற்கு யாரோ ஒருவரைக் காரணம் சொல்லி விட முடியாது.
2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிக அளவு படித்தவர்கள் உள்ள மாநிலம், கேரளா (90.9%). தமிழகத்தின் சதவீதம், 73.4%.
ஒரு பக்கம் அடிப்படைக் கல்வி கற்க முடியாத நிலையில் மக்கள். மறுபுறம், அரசுப் பள்ளிகளிலும் அன்பளிப்பு வசூல் செய்யுமிடமாக மாற்றப்பட்டது. என்ன செய்வதென்று அறியாமல் தவிப்பவர்களோ மக்கள்.
இப்படிப்பட்ட சூழலில், படிப்பை தொடர்வதை விட, வேறு ஏதாவது செய்யட்டுமே என, தன் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களே அதிகம்.
சரி, அடிப்படைக் கல்விதான் அப்படி என்றால், மேல் கல்வியும் இப்படித்தான். ஒரு காலத்தில், தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் இருந்த பொறியியல் கல்லூரிகளால், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்து, அதிக அளவில் பணத்தைக் கொடுத்து படித்தனர். கல்லூரி முதலாளிகளோ, நல்ல அளவில் பணம் பார்த்தனர்.
இன்றோ, அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், பணக்காரர்கள் எல்லோரும் விழித்தெழுந்து பல கல்லூரிகளை நிறுவி விட்டனர். இதனால் இந்த ஆண்டு மட்டும், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம், 30,000 இடங்கள் காலியாக உள்ளன.
அரசாங்கம், பொறுப்புடன் செயல்பட்டு, இப்படிக் கண்டபடி, கண்ட கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்த வேண்டும். அடிப்படைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கல்வித் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, வருகின்ற ஆண்டுகளிலாவது, இந்தியாவில் அனைவரும் கல்வி கற்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை:
அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துகிறோம் என்று கூறி, இன்று அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசுபட்டுக் கிடக்கின்றது. சொகுசு என்ற பெயரில், அதிக அளவில் கட்டுப்பாடற்ற வாகனங்கள், அவைகளிலிருந்து வரும் புகை, மாசுவை அதிகப் படுத்துகின்றன.
இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என்று, தெருக்களில் இன்று நடக்க முடியாத நிலை மக்களுக்கு.
சாலைகளில் இரு புறங்களிலும் இருந்த மரங்களை வெட்டி, கட்டமைப்பிற்காக வெட்டினோம் என்று கூறுவது ஒரு புறம். காடுகளில், பொழுதுபோக்கிற்காக, வேட்டையாடி, பல விலங்குகளை கொன்று குவிக்கிறார்கள்.
காடுகளில் பலர், அரசியல் செல்வாக்குடனும், அரசு அதிகாரிகளின் செல்வாக்குடனும், மரங்களை வெட்டி சாய்க்கின்றார்கள்.
இவற்றையெல்லாம் தாங்காத இயற்கை இன்னொறு புறம், காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர்களில் காட்டு வளங்கள் நாசமாகின்றன.
உள்ளூர், வெளியூர் அன்றி, வெளி மாநிலங்களில் இருந்து வரும் தீவிரவாதிகளின் ஊடுறுவல்கள் போல பல சீரழிவுகள் இயற்கையை பாழ்படுத்துகின்றன.
அரசாங்கம், தனது அதிகாரிகளைக் கொண்டு, தற்போது இருக்கின்ற சட்ட திட்டங்களை அமல்படுத்தினாலே, சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை மிகவும் சீராகும்.
அரசாங்கம், தனது அதிகாரிகளைக் கொண்டு, தற்போது இருக்கின்ற சட்ட திட்டங்களை அமல்படுத்தினாலே, சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை மிகவும் சீராகும்.
சுகாதாரத்துறை:
இந்தியாவில் தீர்க்க முடிந்த 1000 பிரச்சினைகள் இருந்தால், அதில் தீராத பிரச்சினை இந்த சுகாதாரம்.
இன்று சிகிச்சை, மருந்து, போன்றவை அதிக பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் என்று உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை வரை பணம், பணம்... சரியாக மருந்து இல்லை, மருத்துவர் வசதி இல்லாமை.
சுகாதாரத்துறையில் நல்ல முன்னேற்றத்தையும், சீர்திருத்தங்களையும் மிக தைரியமாகக் கொண்டு வந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அன்புமணி அவர்கள்.
ஐந்து ஆண்டுகளில் எல்லாமே நடந்துவிடாது. என்றாலும், 62 ஆண்டுகளாயும், இன்னும் போதிய வசதியில்லாத நிலை.
கிராமப்புற வளர்ச்சி:இன்று சிகிச்சை, மருந்து, போன்றவை அதிக பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் என்று உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை வரை பணம், பணம்... சரியாக மருந்து இல்லை, மருத்துவர் வசதி இல்லாமை.
சுகாதாரத்துறையில் நல்ல முன்னேற்றத்தையும், சீர்திருத்தங்களையும் மிக தைரியமாகக் கொண்டு வந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அன்புமணி அவர்கள்.
ஐந்து ஆண்டுகளில் எல்லாமே நடந்துவிடாது. என்றாலும், 62 ஆண்டுகளாயும், இன்னும் போதிய வசதியில்லாத நிலை.
இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்களையும், அங்கு வசிக்கின்ற பெரும்பாலான விவசாயக் குடும்பங்களுக்கான வளர்ச்சி என்றால், அது அவர்களின் அறியாமையைப் போக்குவதாகும். அவர்கள் இன்றும், மூட நம்பிக்கையிலும், இருக்கின்ற அவர்களை மீட்டு விட்டாலே, கிராமங்கள் வளர்ச்சிப் பெற்றுவிடும். நான் விவசாயத் துறைத் தலைப்பில் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களும் இதற்குப் பொருந்தும்.
விவசாயம் மட்டுமன்றி, நெசவுத்தொழில், மட்பாண்ட உற்பத்தி போன்ற அனைத்து தொழில் வளர்ச்சிகளும் கிராமப்புற வளர்ச்சியே. இவைகளின் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பது, அவைகளின் விற்பனைக்கு வழி வகுப்பது போன்ற நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளே, ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முடிவுரை:
இப்படி எல்லாத் துறைகளுக்கும் ஐந்தாண்டுத் திட்டங்களிட்டும், அவற்றை சரியான முறையில் நிர்வகிக்காமல் அதிகமான துறைகள், இன்று துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன.
நிர்வாகத்திறமையும், அடிப்படை வசதிகளையும், அதற்கான ஒத்துழைப்பை மக்களும் அளிப்பின், மென்பொருள் துறை மட்டுமல்லாது, எல்லாத் துறைகளும் சிறந்து விளங்கும்.
Saturday, September 5, 2009
வைதீஸ்வரன் கோயிலும் வயித்தெறிச்சலும்!
நான், ஓவரா சாமி கும்பிடாதீங்க அப்படின்னா, நீங்க கேப்பீங்களா? பெரியார் சொன்னதையே நாங்க கேக்கல, இவரு வந்துட்டாரு ... அப்படின்னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணிட்டு போயிடுவீங்க... இருந்தாலும் நடந்ததை சொல்றேங்க...
மாமா பையனுக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்லி, வைதீஸ்வரன் கோயில்ல இருக்கின்ற செவ்வாய்க்கு (சாமி) ஒரு அர்ச்சனை செய்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னதை எனது மாமா என்னிடம் கூறினார்.
நான் எவ்வளவு சொல்லியும், கிளம்புடா சீக்கிறம் என்று சொல்லி விட்டார். சரி என்று எல்லோரும் புறப்பட்டு வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றோம்.
நாங்கள் சென்று சேர்ந்தபோது மாலை மணி 3:00. கோயில் திறக்க இன்னும் 1:30 மணி நேரம் ஆகும் என்று கூறி விட்டார்கள்.
காத்திருந்தோம், அவ்வேளையில், அங்கிருந்து கடைக்காரர், அர்ச்சனைக்குத் தேவையான பொருள்களை தன் கடையில் வாங்குமாறும், அர்ச்சனையை நல்லபடியாக முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்வதாகவும் கூறினார். எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். கடைக்கு ரூ. 75 ஆகும் எனக்கூறினார்.
அவர் கூறியதை ஏற்று, நாங்கள் கோயிலுக்குள் சென்று அமர்ந்திருந்தோம். மணியும் ஆனது. கோயிலும் திறந்தது. கடைக்காரர், 5 தேங்காய்களுடன் கூடிய தட்டில், அர்ச்சனைக்குத் தேவையான பொருள்களை எடுத்து வந்து எங்களை அழைத்தார். ஒரு ஐயரிடம் சென்று தட்டை வைத்தார்.
அந்த ஐயர், கோயிலின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்தார். எங்களிடம் யார் பெயருக்கு அர்ச்சனை செய்யவேண்டுமெனக் கேட்டார். நான், என் மாமா மகனின் பெயர், ராசி, நட்சத்திரம் எல்லாம் கேட்டதற்கிணங்க கூறினேன்.
அவர், அர்ச்சனையை அங்கேயே முடித்து விட்டார். இப்படி 3 சாமிகளுக்கு அர்ச்சனை முடிந்ததும், இனிமேல் 6 மணிக்குதான் அம்பாளுக்கும், வைதீஸ்வரனுக்கும் அர்ச்சனை செய்ய முடியும், எனவே, இருக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு இருக்கலாம், முடியாதவர்கள், ஊருக்குச் செல்லலாம் என்றும், இதுவரை நடந்த அர்ச்சனைகளுக்கான பழம் தேங்காய்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஐயர் கூறினார்.
மாமா பையனுக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்லி, வைதீஸ்வரன் கோயில்ல இருக்கின்ற செவ்வாய்க்கு (சாமி) ஒரு அர்ச்சனை செய்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னதை எனது மாமா என்னிடம் கூறினார்.
நான் எவ்வளவு சொல்லியும், கிளம்புடா சீக்கிறம் என்று சொல்லி விட்டார். சரி என்று எல்லோரும் புறப்பட்டு வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றோம்.
நாங்கள் சென்று சேர்ந்தபோது மாலை மணி 3:00. கோயில் திறக்க இன்னும் 1:30 மணி நேரம் ஆகும் என்று கூறி விட்டார்கள்.
காத்திருந்தோம், அவ்வேளையில், அங்கிருந்து கடைக்காரர், அர்ச்சனைக்குத் தேவையான பொருள்களை தன் கடையில் வாங்குமாறும், அர்ச்சனையை நல்லபடியாக முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்வதாகவும் கூறினார். எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். கடைக்கு ரூ. 75 ஆகும் எனக்கூறினார்.
அவர் கூறியதை ஏற்று, நாங்கள் கோயிலுக்குள் சென்று அமர்ந்திருந்தோம். மணியும் ஆனது. கோயிலும் திறந்தது. கடைக்காரர், 5 தேங்காய்களுடன் கூடிய தட்டில், அர்ச்சனைக்குத் தேவையான பொருள்களை எடுத்து வந்து எங்களை அழைத்தார். ஒரு ஐயரிடம் சென்று தட்டை வைத்தார்.
அந்த ஐயர், கோயிலின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்தார். எங்களிடம் யார் பெயருக்கு அர்ச்சனை செய்யவேண்டுமெனக் கேட்டார். நான், என் மாமா மகனின் பெயர், ராசி, நட்சத்திரம் எல்லாம் கேட்டதற்கிணங்க கூறினேன்.
அவர், அர்ச்சனையை அங்கேயே முடித்து விட்டார். இப்படி 3 சாமிகளுக்கு அர்ச்சனை முடிந்ததும், இனிமேல் 6 மணிக்குதான் அம்பாளுக்கும், வைதீஸ்வரனுக்கும் அர்ச்சனை செய்ய முடியும், எனவே, இருக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு இருக்கலாம், முடியாதவர்கள், ஊருக்குச் செல்லலாம் என்றும், இதுவரை நடந்த அர்ச்சனைகளுக்கான பழம் தேங்காய்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஐயர் கூறினார்.
நாங்கள் இருந்தோம். எல்லாம் 6 மணிக்கு ஆரம்பமானது. அம்மா, நீ ஒரு அர்ச்சனை செய்துகொள் என்று கூறினார். நானும் ஒரு 3 ரூபாக்கு அர்ச்சனை சீட்டு வாங்கி அதற்கான பொருள்களையும் வாங்கி அர்ச்சனை செய்தேன்.
வேறு ஒரு ஐயர் வந்து, என்னுடைய பைக்கு பதிலாக, வேறு ஒன்றைக் கொடுத்தார். நான் பெற்றுக்கொண்டேன். கொடுக்கும் போது, தட்சணையாக 5 ருபாய் கேட்டார். நான் முடியாது என்று கூறிவிட்டேன்.
வேறு ஒரு ஐயர் வந்து, என்னுடைய பைக்கு பதிலாக, வேறு ஒன்றைக் கொடுத்தார். நான் பெற்றுக்கொண்டேன். கொடுக்கும் போது, தட்சணையாக 5 ருபாய் கேட்டார். நான் முடியாது என்று கூறிவிட்டேன்.
என்னைக் கண்டிப்பாகத் திட்டி இருப்பார். பரவாயில்லை.
இதற்கடுத்து, 5 தேங்காய் தட்டு வந்தது. ஐயருக்கு 101 ரூபாய் தட்சணை வைத்துவிட்டு தட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள் கூறினார் கடைக்காரர். மாமாவும் கொடுத்துவிட்டார்.
அடுத்து, என் மனைவிக்கு அங்கு இருந்த சில பொருள்களை வாங்கவேண்டும் என்ற ஆசை. நான் அவளுடன் வளையல் போன்ற பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தேன். அந்த வேளையில், கடைக்காரர் எனது மாமாவிடம், கடைக்கு ரூ 75ம், மாலை, 5 அர்ச்சனை, ஐயர் செலவு என்று ரூ 300 தீட்டிவிட்டார். அவர் கேட்டதைவிட ரூ 225 மேல்.
இப்படி கோயிலுக்குள் ஒரு கொள்ளையே நடக்கின்றது. இங்கு நன்றாக படித்த நாம் (என்னையும் சேர்த்து) கடவுளைப் பற்றி பேசியும், எழுதியும், படிக்காத பாமர மக்களுக்கு இன்னும் மூட நம்பிக்கைகளை உரம்போட்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றோம்.
இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது வயிறெரிந்தது. அங்கேயே வண்டியை நிறுத்தி ஒரு 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் 5 ரூ அதிகமாக கொடுத்து வாங்கி குடித்தேன்!
வேண்டுகோள்: தயவுசெய்து சாமி கோயிலுக்கு செல்லும் போது, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், சூடம், பத்தி போன்ற அத்தியாவசியமானதை நீங்களே எடுத்துச் செல்லுங்கள். முக்கியமாக, நவகிரக கோயில்களுக்கு செல்லும்போது மிகவும் கவனமாகச் செல்லுங்கள்.
வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல நினைக்கும் அன்பர்கள், முதலில் 5 தேங்காய்கள், 10 வாழைப் பழங்கள், விபூதி, குங்கும பாக்கெட்டுகள், பூமாலை போன்றவற்றை நீங்களே வாங்கிச் செல்லுங்கள். அத்துடன், அந்த கோயிலில், எடுத்துக்காட்டாக, செவ்வாய் கோயிலில் இருக்கின்ற ஐயரிடம் கொடுத்து, அர்ச்சனை செய்துகொள்ளுங்கள். தட்சணை கொடுக்காதீர்கள். ஆனால், அர்ச்சனை சீட்டு ரூ 3 க்கு வாங்கிக் கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு சன்னிதானத்திலும் நீங்களே அர்ச்சனை செய்துகொண்டால், ரூ 300 முதல் ரூ 500 வரை மிச்சப் படுத்தலாம்.
வேண்டுகோள்: தயவுசெய்து சாமி கோயிலுக்கு செல்லும் போது, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், சூடம், பத்தி போன்ற அத்தியாவசியமானதை நீங்களே எடுத்துச் செல்லுங்கள். முக்கியமாக, நவகிரக கோயில்களுக்கு செல்லும்போது மிகவும் கவனமாகச் செல்லுங்கள்.
வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல நினைக்கும் அன்பர்கள், முதலில் 5 தேங்காய்கள், 10 வாழைப் பழங்கள், விபூதி, குங்கும பாக்கெட்டுகள், பூமாலை போன்றவற்றை நீங்களே வாங்கிச் செல்லுங்கள். அத்துடன், அந்த கோயிலில், எடுத்துக்காட்டாக, செவ்வாய் கோயிலில் இருக்கின்ற ஐயரிடம் கொடுத்து, அர்ச்சனை செய்துகொள்ளுங்கள். தட்சணை கொடுக்காதீர்கள். ஆனால், அர்ச்சனை சீட்டு ரூ 3 க்கு வாங்கிக் கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு சன்னிதானத்திலும் நீங்களே அர்ச்சனை செய்துகொண்டால், ரூ 300 முதல் ரூ 500 வரை மிச்சப் படுத்தலாம்.
Saturday, August 15, 2009
மணற்கேணிக்கு என் பதிவுகள்
நம்மல்லாம் இன்னும் திருந்தவே இல்ல அப்படிங்கிறதுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு! :)
பள்ளிக்கூடமாகட்டும், கல்லூரியாகட்டும், தேர்வுக்கு முந்திய நாள்தான் படிக்கிறது, எப்படியோ பாஸ் ஆயிடறது! (நம்புங்கப்பா :) )
அதே மாதிரிதான், மணற்கேணி போட்டிக்கு, ரொம்ப நாளா, பதிவு அனுப்பனும்னு நினைத்து, போட்டியின் இறுதி நாளுக்கு முந்தைய நாள்தான் அதை அனுப்ப முடிஞ்சிது. நாங்கல்லாம், லேட்டா அனுப்பினாலும், லேட்டஸ்ட்டா அனுப்புவோம்ல! (போட்டி முடிவு வரும்போது தெரியும் ஹி ஹி....)
நான் இரண்டு தலைப்புகளில் கட்டுரை எழுதி அனுப்பியுள்ளேன்.
1. அரசியல் மற்றும் சமூகம் என்னும் தலைப்பில், பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் என்ற கட்டுரையும்
2. அறிவியல் என்னும் தலைப்பில், மென்பொருள் துறை தவிற, இந்தியர்கள் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் என்ற கட்டுரையும்
அனுப்பியுள்ளேன்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் அனுப்பிய கட்டுரைகள் சிங்கைத் தமிழ்ப் பதிவர்களை சென்றடைந்து விட்டனவாம்! ஹைய்யா......
அதுவே ஒரு வெற்றதான்! இல்லையா பின்ன, இன்னைக்கு, நாளைக்குன்னு ஒரு வழியா அனுப்பிட்டோம்கிற திருப்திதான்!
கட்டுரைகளை ஏற்றுக்கொண்ட மணற்கேணி குழுமத்திற்கு ஒரு பெரிய நன்றி!
அப்புறம், போட்டி முடிவுகள் வெளிவந்ததும், என்னுடைய கட்டுரைகளை, நான், என்னுடைய வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.
அவ்ளோதானா, இல்ல, இன்னும் இருக்கு!
நான் இக்கட்டுரைகளை எழுதி அனுப்ப உறுதுணையாக இருந்த என் மனைவிக்கும், நான் தட்டுச்சு செய்யும்போதெல்லாம், நீமோ படம் போடு என்று அழுதும், நான் படம் போடாமல் தட்டிக்கழித்ததைப் பொறுத்துக் கொண்ட என் மகனுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்!
அப்பால, நம்ம சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி யின் இணைய முகவரிகள் இருக்கு, ஒரு சொடுக்கு, சொடுக்கிட்டு போங்க!
Monday, August 10, 2009
நடந்தது என்ன?
ஆரம்பத்துல இருந்தே சொல்லிகிட்டு இருந்தேன், இந்த முறை முயற்சி, அடுத்த முறை வெற்றின்னு. அதே மாதிரி, இந்த முறை நடந்த, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commssion) குரூப் -1 (Group I Services) என்கின்ற பணியின் முதன்மைத் தேர்வில் (Prelims) நான் தோற்றுவிட்டேன்.
சற்றே நிமிர்ந்தும், குணிந்தும், நடந்தும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து சிந்தித்துப் பார்த்தேன். நடந்தது என்ன? என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.
இதுதான் நடந்தது...
ஆரம்பத்தில் இருந்த ஆர்வம், வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. பல்வேறு சூழல்கள், பயணங்கள், பணிகள் என்று காரணங்கள் பலவற்றை குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது இதுதான்,
1. 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை (கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல்) நன்றாக படித்து தெளிவாக வேண்டும்
2. தினமும் வரும் முக்கியமான செய்திகளை படித்து, அதை குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்
3. தொலைக் காட்சி அல்லது தமிழில் தினமனி போன்ற ஊடகங்களை தினமும் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டும்
4. தமிழில் இலக்கியங்கள், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அவரது படைப்புகளை நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்
5. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) சாராம்சங்களையும், அதில் உள்ள பிரிவுகளையும் (Articles) நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்
6. இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் (Census) முறைகள், சென்ற முறை கணக்கெடுப்பின்படி உள்ள புள்ளியல் விவரங்களை தொகுத்து வைத்துப் படித்து தெளிதல் வேண்டும்.
7. இந்தியாவில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பற்றிய புள்ளி விவரங்களை தொகுத்து வைத்து படித்து தெளிதல் அவசியம்
8. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள், அவற்றில் வெற்றி பெற்றவர்கள் விவரங்களையும் தெளிந்து தெரிதல் வேண்டும்.
9. இடைத் தேர்தல்கள் பற்றிய விவரங்களை அறிந்திருக்க வேண்டும்.
10. துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் விவரங்கள், துறையின் தலைவர்கள், விசாரணைக் குழுக்கள், அவற்றின் உறுப்பினர்கள், முடிவுகள்.
மேற்கண்ட அனைத்தையும் செய்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், வெகு சில விவரங்களையே சேகரித்து வைத்துக் கொண்டு தேர்வை சந்தித்தேன்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எந்த தேர்வு எழுத விரும்பினாலும், மேற்கண்ட 10 விவரங்களை அடிப்படையாக வைத்துக் கொள்ளவும். இதைத் தவிர்த்து கேள்விகள் வர முடியாது. வராது.
அடுத்த ஆண்டிற்கான தேர்வு அறிவிப்பு வரும் நவம்பர் மாத அளவில் வெளி வரும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் (http://tnpsc.gov.in/recruitment.htm) இதற்கான அறிவிப்பு இருக்கும்.
மேலும் விவரம் அறிய பின்னூட்டுங்கள்!
Labels:
Group I,
Preparation Secret,
TIPS for Group I,
Tips for TNPSC,
TNPSC
Tuesday, June 16, 2009
யார் குற்றம்? - 1
"டேய், நீயாச்சும் நாலு எழுத்து படிச்சி எதோ ஒரு கவர்மென்ட் உத்தியோகத்துக்கு போகமாட்டியான்னு நினைச்சிகிட்டு இருக்கேன்" என்று பலர் கூற நான் பார்த்திருக்கின்றேன்.
கல்வியின் முக்கியத்துவம் பணம்தான் என்றில்லை! அறியாமையை அகற்றி, இந்தப் பேரண்டமே போற்றுமளவுக்கு பேரும் புகழும் நமக்கு கொடுப்பது அவன் பயின்ற கல்விதான்.
இங்கிலாந்துக்கு நம் முன்னோர்கள் அடிமையாயிருந்த போதிலிருந்து, இன்று வரை கல்விக்கு அளவுகோல் வைத்து, அது இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பல தலைவர்கள், தலைமுறையினர்கள் கல்வித் திட்டங்களில் பல மாறுதல்களை கொடுத்துவிட்டு காலம் சென்றுவிட்டனர்.
பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள்தான், பாடத்திட்டங்களை சிறந்த முறையில் மாற்றி அமைத்தார். மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வுகளை நடத்தும் முறையைப் புகுத்தினார்.
இப்படி கல்விக் கதைகள் ஏராளமாக இருக்கின்ற இத்தமிழகத்தில் இன்று கல்வியை விலை பேசி ஏலம் விடும் அவலம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
ஒரு மாணவன் 5ம் வகுப்பு படித்து 6ம் வகுப்புக்கு அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு மாற வேண்டும். அவனுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க, அதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ரூ 100 பெற்றிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட வசூல் அங்கு படித்த அனைத்து மாணவர்களுக்கும்தான்.
அந்த மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒரு பழைய மாணவன், மாற்றுச்சான்றிதழ் பெற ரூ 250 கேட்கின்றார்கள். சான்றிதழ் உடனே கிடைக்க ரூ 500 கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இப்படி வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை. அப்படி கொடுத்திருந்தால், நாம் நேரடியாக அரசாங்கத்தால் கொடுமைப் படுத்தப் படுகிறோம் என்பது தெளிவாகும்.
இவைகள் எல்லாம் அரசுப் பள்ளிகள், இதுதான் இங்கே விசேஷமான செய்தி!
இப்போது அரசுப் பள்ளிகளிலும் கூட, ஆசிரியர்கள் டியூஷன் எடுக்க ஆரம்பித்து விட்டனர். செய்முறைத் தேர்வில் 50 மதிப்பெண் பெற வேண்டுமென்றால், அவரிடம் அந்த மாணவன் டியூஷன் படித்துதான் ஆக வேண்டி இருக்கின்றது.
அரசுப் பள்ளிகளும், அங்கே பணிபுரிகின்ற அலுவலர்களும், ஆசிரியர்களும், இப்படி செய்ய ஆரம்பித்தால், தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் பணம் கேட்கும் அவலம் தொடரத்தான் செய்யும்.
இன்று படித்த ஒரு செய்தி,
"நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஒரு அரசுப் பள்ளி, தனியார் பள்ளிக் கூடங்களைப் போலவே மாணவிகளிடம் விதம் விதமான சீருடைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் நிதிச் சுமையை ஏற்றி வருவதாக மக்கள் குமுறுகின்றனர்."
இப்படி எல்லா இடங்களிலும் கொடுமைகள்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுவார்கள். அப்படிப் பட்ட இளம் வயதில், எந்த இடத்தில் ஒரு மனிதனை மாணவனாக்கி, அவனுக்கு கல்வியையும், வாழ்க்கையையும், அவன்தான் எதிர்காலத்தின் இரும்புத் தூண் என்றும் கூறி உருவாக்குகின்றார்களோ, அங்கே லஞ்சம் வாங்கவும் இன்று கற்றுக் கொடுப்பதுதான் என்னுடைய வேதனை.
இதில், வாங்கும் அரசு அலுவலர்கள் குற்றவாளிகளா? அவர்கள் கேட்டாலும் கொடுப்பவர்கள் குற்றவாளிகளா? இவைகள் எல்லாம் நடக்கின்றன என்ற என்னற்ற பத்திரிகை செய்திகள், மற்றும் கோரிக்கை மனுக்களைப் பார்த்தும் அலட்சியமாய் இருக்கும் அரசு அதிகாரிகள் குற்றமா? அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள் குற்றமா?
யார் குற்றம்??
...தொடரும்
கல்வியின் முக்கியத்துவம் பணம்தான் என்றில்லை! அறியாமையை அகற்றி, இந்தப் பேரண்டமே போற்றுமளவுக்கு பேரும் புகழும் நமக்கு கொடுப்பது அவன் பயின்ற கல்விதான்.
இங்கிலாந்துக்கு நம் முன்னோர்கள் அடிமையாயிருந்த போதிலிருந்து, இன்று வரை கல்விக்கு அளவுகோல் வைத்து, அது இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பல தலைவர்கள், தலைமுறையினர்கள் கல்வித் திட்டங்களில் பல மாறுதல்களை கொடுத்துவிட்டு காலம் சென்றுவிட்டனர்.
பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள்தான், பாடத்திட்டங்களை சிறந்த முறையில் மாற்றி அமைத்தார். மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வுகளை நடத்தும் முறையைப் புகுத்தினார்.
இப்படி கல்விக் கதைகள் ஏராளமாக இருக்கின்ற இத்தமிழகத்தில் இன்று கல்வியை விலை பேசி ஏலம் விடும் அவலம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
ஒரு மாணவன் 5ம் வகுப்பு படித்து 6ம் வகுப்புக்கு அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு மாற வேண்டும். அவனுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க, அதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ரூ 100 பெற்றிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட வசூல் அங்கு படித்த அனைத்து மாணவர்களுக்கும்தான்.
அந்த மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒரு பழைய மாணவன், மாற்றுச்சான்றிதழ் பெற ரூ 250 கேட்கின்றார்கள். சான்றிதழ் உடனே கிடைக்க ரூ 500 கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இப்படி வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை. அப்படி கொடுத்திருந்தால், நாம் நேரடியாக அரசாங்கத்தால் கொடுமைப் படுத்தப் படுகிறோம் என்பது தெளிவாகும்.
இவைகள் எல்லாம் அரசுப் பள்ளிகள், இதுதான் இங்கே விசேஷமான செய்தி!
இப்போது அரசுப் பள்ளிகளிலும் கூட, ஆசிரியர்கள் டியூஷன் எடுக்க ஆரம்பித்து விட்டனர். செய்முறைத் தேர்வில் 50 மதிப்பெண் பெற வேண்டுமென்றால், அவரிடம் அந்த மாணவன் டியூஷன் படித்துதான் ஆக வேண்டி இருக்கின்றது.
அரசுப் பள்ளிகளும், அங்கே பணிபுரிகின்ற அலுவலர்களும், ஆசிரியர்களும், இப்படி செய்ய ஆரம்பித்தால், தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் பணம் கேட்கும் அவலம் தொடரத்தான் செய்யும்.
இன்று படித்த ஒரு செய்தி,
"நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஒரு அரசுப் பள்ளி, தனியார் பள்ளிக் கூடங்களைப் போலவே மாணவிகளிடம் விதம் விதமான சீருடைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் நிதிச் சுமையை ஏற்றி வருவதாக மக்கள் குமுறுகின்றனர்."
இப்படி எல்லா இடங்களிலும் கொடுமைகள்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுவார்கள். அப்படிப் பட்ட இளம் வயதில், எந்த இடத்தில் ஒரு மனிதனை மாணவனாக்கி, அவனுக்கு கல்வியையும், வாழ்க்கையையும், அவன்தான் எதிர்காலத்தின் இரும்புத் தூண் என்றும் கூறி உருவாக்குகின்றார்களோ, அங்கே லஞ்சம் வாங்கவும் இன்று கற்றுக் கொடுப்பதுதான் என்னுடைய வேதனை.
இதில், வாங்கும் அரசு அலுவலர்கள் குற்றவாளிகளா? அவர்கள் கேட்டாலும் கொடுப்பவர்கள் குற்றவாளிகளா? இவைகள் எல்லாம் நடக்கின்றன என்ற என்னற்ற பத்திரிகை செய்திகள், மற்றும் கோரிக்கை மனுக்களைப் பார்த்தும் அலட்சியமாய் இருக்கும் அரசு அதிகாரிகள் குற்றமா? அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள் குற்றமா?
யார் குற்றம்??
...தொடரும்
Subscribe to:
Posts (Atom)
